பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பாக மோதல் போக்கானது நீடித்து வருகிறது. தலைவர் பதவியை விட்டு கொடுக்க தயார் என ராமதாஸ் கூறியும், அன்புமணி எழுதித் தர சொல்கிறார் என்கிற குற்றச்சாட்டை ராமதாஸ் முன்வைத்திருக்கிறார். இந்நிலையில் தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மோடி பதவியேற்பு விழாவிற்கு டெல்லி செல்லும் பொழுது அப்பா கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அன்புமணி சொன்னார்.
விமானத்தில் சென்னை வரும் போது அப்பா தவறாக கூறியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றார். இரண்டு சொட்டு கண்ணீர் விட்டேன். அது பிளைட்டின் தரையில் விழுந்தது. என்னுடைய நெஞ்சில் குத்துகிறார்கள். என்னை நடைப்பிணம் ஆக்கிவிட்டு நடை பயணம் செய்கிறார்கள். குருவை மிஞ்சிய சீடன் இருக்கலா.ம் ஆனால் தந்தை மிஞ்சிய தனையன் இருக்க கூடாது. இதுவே நீதி, நேர்மை, தர்மம் என்று கூறியிருக்கிறார்.
