
CINEMA
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ‘ஜெயிலர்’ பட ரஜினி மருமகள் மிர்ணா… 4 முறை பெயர் மாற்றம் செய்தாரா?…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, மிர்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஒரே வாரத்தில் உலக அளவில் 375.40 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் எந்த அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வசூல் செய்ததில்லை
தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி 2 வாரங்களை எட்ட உள்ள நிலையில், ரசிகர்கள் பலர் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே ஜெயிலர் படத்தின் வசூல் 600 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகள் ரோலில் நடிக்க நடிகை மிர்னா மேனன் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை இவர் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த பின்னர், நடிகை மிர்ணாவை பற்றிய பல சர்ச்சைகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கிய இவர், இதை தொடர்ந்து ஒருவரின் வாழ்நாள் அடையாளமாக பார்க்கப்படும் அவரின் பெயரையே நான்கு முறை மாற்றியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் சொந்த பெயர் ஆதிரா சந்தோஷ். நடிக்க வாய்ப்பு தேடிய போது, சில மலையாள தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அப்போது பெயர் ஸ்டைலிஷாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் சாய்னா சந்தோஷ் என மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் போது அதிதி மேனன் என்று பெயரை மாற்றினார். தற்போது இவர் மிர்ணா மேனன் என்கிற பெயரில் களமிறங்கி உள்ளார். இதன்படி பார்த்தால் இவர் தற்பொழுது வரை 4 முறை தனது பெயரை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.