அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சண்ட்க்கும் நேற்று விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண கொண்டாட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் ராதிகா மெர்சண்ட் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் அணிந்திருந்த புடவை மற்றும் அதன் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
முதலாவதாக ராதிகா மெர்சண்ட் 24 கேரட் தங்கத்தால் ஆன ஒரு புடவையை அணிந்துள்ளார். அந்த புடவையை மணீஷ் மல்கோத்ரா என்ற வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார். அதன் விலை கோடிகள் ஆகும். நீதா அம்பானி தனது இளைய மருமகள் ராதிகா மெர்சண்ட்க்கு அந்த புடவையை பரிசாக கொடுத்துள்ளார்.
இரண்டாவதாக ராதிகா மெர்சண்ட் கருப்பு நிற புடவை ஒன்றை அணிந்திருந்தார். அந்த புடவை பார்ப்பதற்கு சிம்பிளாகவும் அழகாகவும் இருக்கும். அந்த புடவையை மணீஷ் மல்கோத்ரா வடிவமைத்துள்ளார்.
அடுத்ததாக ராதிகா மெர்சண்ட் ஒரு வைர புடவையை அணிந்துள்ளார். பார்ப்பதற்கு அந்த புடவை சிம்பிளாக இருக்கிறது. ஆனால் அதில் பல்வேறு வகையான கிறிஸ்டல் வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த அழகான புடவையை பிரபல வடிவமைப்பாளரான அபூ ஜானி சந்திப் கோஸ்லா வடிவமைத்திருக்கிறார். அந்த புடவையும் கோடிகள் செலவழிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ராதிகா மெர்சண்ட் ஒரு லெகங்கா அணிந்துள்ளார். அந்த உடையில் தனித்துவமான உண்மையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கள் துப்பட்டாவை அவர் அணிந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த சிருஷ்டி கல்கத்தாவாலா என்பவர் அந்த துப்பட்டாவை வடிவமைத்துள்ளார். சுமார் 2 கிலோ மஞ்சள் சாமந்தி மற்றும் மல்லிகை மொட்டு வைத்து அந்த துப்பட்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த துப்பட்டாக்களின் விலை 15 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது.
அடுத்ததாக ராதிகா மெர்சண்ட் ஒரு பிங்க் நிற லெஹெங்கா ஆடையை அணிந்துள்ளார். அந்த ஆடையில் துர்கா வசனம் எழுதப்பட்டிருக்கும். அந்த ஆடை பனாரஸ் துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாமேரு விழாவிற்காக ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ரா அதனை வடிவமைத்துள்ளார். இப்படி ராதிகா மெர்சண்ட் அணிந்திருந்த அனைத்து ஆடைகளுக்கும் லட்சங்கள் முதல் கோடிகள் வரை மதிப்பு உடையது.