எம்.எஸ்.வி-க்கு ஒன்னு எனக்கு மட்டும் வேறயா..? பரிசு மாற்றத்தால் குழம்பி போன கவிஞர் கண்ணதாசன்..!!

By Priya Ram on ஜூலை 16, 2024

Spread the love

பிரபல தயாரிப்பாளரான நீல நாராயணன் கடந்த 1971-ஆம் ஆண்டு அன்புக்கு ஒரு அண்ணன் என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை என்.எஸ் மணியன் இயக்கினார். இந்த படத்திற்கான பாடல் வரிகளை எழுதுவதற்காக நீல நாராயணன் கண்ணதாசனை அணுக முடிவு செய்தார். நீலநாராயணனின் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணதாசனை சந்தித்து இந்த படத்திற்கு நீங்கள் தான் பாட்டு எழுத வேண்டும்.

கவிஞரை உருவாக்கிய கவிஞர்! - நெகிழும் கண்ணதாசன் ரசிகர் #MyVikatan | Article  about poet kannadasan - Vikatan

   

அண்ணன் இதனை உங்களிடம் கொடுத்து வர சொன்னார் எனக்கூறி ஒரு நாணயத்தை கொடுத்தனர். அவர்கள் சென்ற பிறகு கண்ணதாசன் அந்த நாணயத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அது 20 பைசா நாணயம். ஒருவேளை இது நீல நாராயணனின் சென்டிமெண்டாக இருக்கும் என நினைத்த கண்ணதாசன் எம்.எஸ் விஸ்வநாதனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

   

MS Viswanathan, 'king of light music' who was almost drowned by his mother

 

நீல நாராயணனின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்து சிலர் 20 பைசா காசை தருவார்கள். அது அவர்களின் செண்டிமெண்டாக இருக்கும் போல. உங்களை பார்க்க வருவதாக தான் என்னிடம் கூறினார்கள். அந்த காசை வாங்கிக் கொள்ளுங்கள் என கண்ணதாசன் கூறியுள்ளார். அவர் கூறியபடியே நீல நாராயணனின் நிறுவனத்தினர் எம்.எஸ் விஸ்வநாதனை சென்று பார்த்து பேசி விட்டு ஒரு தங்க நாணயத்தை கொடுத்தனர்.

உனக்கே கண்ணதாசன், 45% OFF

 

அதனை பார்த்ததும் எம்.எஸ் விஸ்வநாதன் எனக்கு தங்க நாணயம் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் கண்ணதாசனுக்கு ஏன் 20 பைசா நாணயத்தை கொடுத்தீர்கள் என கேட்டுள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த நீல நாராயணனின் நிறுவனத்தினர் தங்க நாணயத்திற்கு பதிலாக 20 பைசா நாணயத்தை மாற்றி கொடுத்து விட்டதாக கூறியுள்ளனர். அதே வேகத்தோடு கண்ணதாசனின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி தங்க நாணயத்தை கொடுத்து விட்டு வந்துள்ளனர்.

10 Facts about the Late M. S. Viswanathan Which Will Make You Revere Him  Even More - The Better India