பட்டாவில் வருகிறது புதிய அதிரடி மாற்றம்.. தமிழகம் முழுவதும் அமல்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 11, 2025

Spread the love

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் தொடர்ந்து மக்களின் வசதிக்காக பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இ பட்டாவில் போட்டோவை இணைக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. நில மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த திட்டத்தை கொண்டு வர இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மாவட்டம், வட்டம் மற்றும் கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இ பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில உரிமையாளர் மாறும் போது பட்டாவையும் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, tamilnilam.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், ரேஷன்கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட விபரங்களை கேட்டு பெறுவர்.