இறந்த குழந்தைகளை மரங்களில் புதைக்கும் மக்கள்… விசித்திரமான பாரம்பரியத்தின் பின்னணி என்ன..?

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள டானா டோராஜா பகுதியில், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு விசித்திரமான மற்றும் உணர்வுப்பூர்வமான இறுதிச்சடங்கு முறை உலகையே வியப்பில் ஆழ்த்துகிறது. அங்கு வாழும் டோராஜா சமூகத்தினர், பற்கள் முளைப்பதற்கு முன்பே இறந்துவிடும் பச்சிளம் குழந்தைகளின் உடல்களை நிலத்தில் புதைக்காமல், பெரிய மரங்களின் தண்டுகளில் துளையிட்டுப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த ‘குழந்தை மரங்கள்’ (Baby Trees) அக்குழந்தைகளின் ஆன்மாவைப் பாதுகாப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த விசித்திரமான பாரம்பரியத்தின் பின்னணியில் ஆழமான ஆன்மீகக் காரணம் ஒன்று உள்ளது. மரம் வளர வளர, அக்குழந்தையின் ஆன்மாவும் சொர்க்கத்தை நோக்கி உயர்ந்து செல்லும் என்பது அந்த மக்களின் நம்பிக்கை. மரத்தின் உட்புறத்தில் உடலை வைத்து, தென்னை நார் அல்லது பனை ஓலைகளால் அந்தத் துளையை மூடிவிடுவார்கள். காலம் செல்லச் செல்ல மரம் அந்த உடலைத் தன்னுள் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறது. சிதைந்த உடல்கள் இயற்கையோடு ஒன்றிப்போவதைக் குறிக்கும் இச்சடங்கு, இன்றும் டோராஜா மக்களின் கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறது.