பகீர்!.. “ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட 1 மாத குழந்தை!.. பெற்ற தாயே செய்த கொடூரம்.. பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை”…!!

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரைகேலா கர்சாவான் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெற்ற தாயே தனது ஒன்றரை மாதக் குழந்தையை வெளியே தூக்கி எறிந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹவுரா-பார்பில் ஜன் ஷதாப்தி விரைவு ரயிலில் பயணித்த முத்ராவதி கோபே என்ற பெண், ராஜ்கர்சாவான் மற்றும் மஹாலிமுரூப் நிலையங்களுக்கு இடையே திடீரெனத் தன் மடியிலிருந்த குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசினார். பயணிகள் அலறித் துடிப்பதற்குள், அவர் தனது மூன்று வயது மகளையும் வெளியே தள்ள முயன்றார். ஆனால், ரயிலில் இருந்த பயணிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணைப் பிடித்து, இரண்டாவது குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.

ரயில் அடுத்த நிலையத்தை அடைந்ததும் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பெண்ணும் அவரது கணவர் ஷஹாபுதீனும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தண்டவாளப் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலில், புதர்களுக்குள் இருந்து ஒன்றரை மாதக் குழந்தையின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், மேற்கு சிங்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்ராவதி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஷஹாபுதீனைக் காதல் திருமணம் செய்து, தனது பெயரை ஹசீனா பேகம் என மாற்றிக்கொண்டவர் என்பதும், இவர்கள் ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இவர்களின் காதல் திருமணத்தை ஏற்காத பெண்ணின் குடும்பத்தினர், தங்களின் மகளைக் கடத்தியதாக ஷஹாபுதீன் மீது ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் பிடியாணை (Warrant) பிறப்பித்ததைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் சொந்த ஊருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. பெற்ற தாயே இத்தகைய மிருகத்தனமான செயலில் ஈடுபடக் காரணமான குடும்பப் பின்னணி மற்றும் மனநிலை குறித்து மன்ஜ்கான் காவல் துறையினர் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

குஷியோ குஷி..! இனி கிராமங்களுக்கும் மின்னல் வேக டெலிவரி… பிளிப்கார்ட் – இந்திய தபால் துறை போட்ட மாஸ் டீல்..!!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…

3 minutes ago

“அடிதடி இல்லை.. சத்தமே இல்லை!.. குப்பையை உங்களுக்கே திருப்பித் தர்றேன்.. சுற்றுலாப் பயணிக்கு உள்ளூர் நபர் கொடுத்த ‘தரமான’ செய்கை.. வைரல் வீடியோ”..!!

முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…

4 minutes ago

நெஞ்சை உலுக்கும் வக்கிரம்..! நாயை கூட விடமாட்டீங்களா..? யாருக்கும் தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சிசிடிவி காட்சியால் பயங்கர ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

5 minutes ago

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி?…. பின்னணியில் இருக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ அரசியல் பிளான்…. டிவிட்டரை அதிர வைக்கும் ‘அந்த’ ஒரு நியூஸ்….!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…

6 minutes ago

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்: கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு சடலத்தின் அருகிலேயே.. காதலனுடன் மனைவி செய்த காரியத்தால் ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…

9 minutes ago

போடு ரகிட ரகிட… இனி இவர்களுக்கும் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500…. தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…

10 minutes ago