மீண்டும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை….சிக்கிய கடிதம்….வெளிவந்த பகீர் உண்மை…..

By Begam

Published on:

தமிழில் ‘9 திருடர்கள்’ என்ற படத்தில் நடித்த நடிகை அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் மாடல் அழகியும், நடிகையுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நடிகை அகன்ஷா மோகன். 30 வயதான இவர், மாடலிங் துறையிலும், விளம்பரங்களிலும் பணியாற்றி வந்தார்.

   

 

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார் நடிகை அகன்ஷா. சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. அவர் வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் மேனேஜர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்குள்ள மின் விசிறியில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவருடைய அறையில் இருந்து ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அதில், ‘எனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல… யாரையும் தொல்லை செய்ய வேண்டாம்’ என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடிகையின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் இதேபோன்று சென்னை ஆழ்வார்திருநகரில் ‘பவுலின் ஜெசிக்கா’ என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சினிமா துறையில் பட வாய்ப்புகள் குறைவால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நடிகர், நடிகைகள் தற்கொலை என்பது தொடர்கதை ஆகிவிட்டது.

 

author avatar