அதிகாலையிலேயே தமிழகத்தில் பயங்கர விபத்து… 35 க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.