OMG: திடீரென போட்ட END CARD…. தகவலை அறிந்ததும் ஷாக்கான…. ரேஷ்மா – மதன் ரசிகர்கள்…..!!!!

By admin

Published on:

சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரியல் லைஃபில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவ்வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ரேஷ்மா. இவர் அதே சேனலில் ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதன் பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

அந்த சீரியலில் இவருடன் கதாநாயகனின் தம்பியாக நடித்து வந்தவர் மதன். இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்துள்ளார். இருந்தாலும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்ததன் மூலம் தான் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். பின்னர் சில நாட்கள் கழித்து இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவியது.

அதனை அவர்களும் உறுதி செய்தனர். இவர்களின் காதல் இரு விட்டாருக்கும் தெரிய வர, அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்து வருவதாலேயே அந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது பல அதிரடி திருப்பங்களுக்கு இடையே ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் கூடிய விரைவில் முடிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அந்த சீரியல் கிளைமாக்ஸ் நெருங்கி விட்டதாகவும் இந்த மாதத்துடன் சீரியல் முடிய இருப்பதாகவும் கலர்ஸ் தமிழ் அறிவித்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் இரவு 7:30 மணிக்கு ட்ரெயின் டைமில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் புதிதாக தொடங்கப்பட்ட பச்சைக்கிளி சீரியலுக்காக நேரம் மாற்றப்பட்டது. அதனால் இந்த சீரியலின் டிஆர்பி குறைந்துள்ள நிலையில் சீரியலை விரைவில் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீரியல் தொடங்கி சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் சீரியல் சட்டை என முடிவுக்கு வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.