விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 60 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயலால் இந்த வார எலிமினேஷன் இல்லை என விஜய் தொலைக்காட்சி அறிவித்து விட்டது. சண்டைக்கு பஞ்சமில்லாத இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது அர்ச்சனா , நிக்சன் இடையே சண்டை நடந்து வருகிறது. ஏற்கனவே, வெளியான முதல் ப்ரோமோவில் நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.
அப்பொழுது அர்ச்சனா ‘வினுஷா விசயத்தை நான் வெளில இருந்தப்போ கூட பார்த்தேன்’ என்று திட்ட பதிலுக்கு நிக்சனும் பேச முதல் ப்ரோமோ கலவரத்தில் முடிந்தது. . இதை தொடர்ந்து தற்போது வெளியான ப்ரோமோவிலும், இருவரும் சண்டை போடுவதையே காட்டுகின்றனர்.
அதன்படி, தற்பொழுது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ”கருமம்.. ச்சீ.. இது மூஞ்சிய பாரேன்.. பொண்ணா இது.. சும்மா இருந்து உப்புமா சாப்பிடாம அடுத்தவங்க வேலைல இருந்து தட்டுறது. நான் கலாய்க்க ஆரம்பிச்சா ஒக்காந்து மூணு நாளைக்கு அழுவ. சும்மா வினுஷா, வினுஷான்னு கடுப்பாக்கிட்டு. சொருகிடுவன்’ என திட்டுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் , ‘முதல நிக்சனுக்கு தான் ரெட் கார்டு கொடுக்கணும்’ என்று கூறி வருகின்றனர். இதோ அந்த ப்ரோமோ…
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…
தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…
சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…