HAPPY NEWS மக்களே..! புதிய QR Code வசதி அறிமுகம்.. எதற்கு தெரியுமா..? மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய அப்டேட்…!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தற்போது 1.15 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது . இந்தத் திட்டத்தில் விடுபட்டவர்கள் மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் குறைகளைத் தீர்க்க அரசு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்களின் விவரங்களை வருவாய்க் கோட்டாட்சியர்கள் (RDO) விரைவாகவும் துல்லியமாகவும் சரிபார்க்க ஏதுவாக புதிய QR Code முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட சுமார் 12 லட்சம் பேரில், தகுதியுள்ளவர்கள் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேகமாகத் தொடங்கப்பட்டுள்ள ‘குறைதீர்வு’ இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம்.