“சோகத்தில் மூழ்கிய திரையுலகம்… இந்த நேரத்தில் இது தேவையா…? நடிகை குஷ்புவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்… கிழித்து தொங்கவிட்ட நடிகை…!!”

By Swetha on ஆனி 28, 2026

Spread the love

பிரபல இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக, பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் நேரில் சென்று வாழ்த்தியிருந்தார். ஆனால், சென்னை திரும்பிய பாக்யராஜ் அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக நெஞ்சுவலி ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில், நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர்.சியுடன் திருமண விழாவின் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், “பாக்யராஜ் மறைவுக்கு ஒட்டுமொத்த மாநிலமே துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த புகைப்படப் பதிவு உண்மையில் தேவையா?” என்று விமர்சித்து கேள்வி எழுப்பியிருந்தார். பாக்யராஜின் மறைவுக்குப் பிறகு குஷ்பு இத்தகைய புகைப்படங்களை வெளியிட்டது சமூக வலைதளங்களில் கடும் விவாதப் பொருளாக மாறியது.

   

இந்த விமர்சனத்திற்கு நடிகை குஷ்பு உடனடியாகவும் மிகவும் காரசாரமாகவும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “என் மகளுக்கு 46 மணி நேரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்துள்ளது; அப்படி இருக்கும்போது விமர்சிப்பதற்காக மட்டுமே ஏன் என்னை பின்தொடர்கிறீர்கள்? மேலும், பூர்ணிமாவை யாருக்கு நன்றாகத் தெரியும்? உங்களுக்கா அல்லது எனக்கா? உங்களுக்கு இதைப் பார்ப்பது கடினமாக இருந்தால் என்னை பின்தொடர்வதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டு நெட்டிசனின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.