“முடிச்சுவிடீங்க போங்க” இணையத்தில் வைரலானதால் வந்த வினை… வருமானத்தை இழந்த மும்பை ஆட்டோ டிரைவர்..!!

By Soundarya on ஆனி 17, 2025

Spread the love

அமெரிக்க தூதரகத்திற்கு வரும் விசா விண்ணப்பதாரர்கள் உள்ளே பைகளை கொண்டு செல்ல முடியாததால் அந்த பைகளை வைக்க ஏதாவது ஒரு இடத்தை தேடுகின்றனர். அப்படி பிரபல நிறுவனமான லென்ஸ் கார்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல் ரூபாணி அமெரிக்க தூதரகத்திற்கு சென்ற போது நடந்த ஒரு சம்பவத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதில் விசா விண்ணப்பிப்பதற்காக நான் அமெரிக்க தூதரகம் செல்ல வேண்டியிருந்தபோது பாதுகாப்பு அதிகாரிகள் என் பையை உள்ளே அனுமதிக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்தபோது அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பையை என்னிடம் தாருங்கள் நான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன்.

ஆனால் ஆயிரம் ரூபாய் அதற்கான கட்டணம் என்று கூறினார். நான் முதலில் தயங்கிய பிறகு கொடுத்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது இது ஒரு அற்புதமான பிசினஸ் . அந்த ஆட்டோ ஓட்டுனர் இது போன்று நாள் ஒன்றுக்கு 30 பேரின் உடமைகளை பாதுகாத்து மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றார் என்று கூறியிருந்தார். இந்த விஷயமா வைரலாகிய நிலையில் போலீசார் அந்த ஆட்டோ டிரைவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது தூதரகத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.