உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியில் வசித்து வரும் ரவீந்திர பிரதாப் சிங் என்பவருக்கு ஷீலா சிங் என்ற மனைவியும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே ரவீந்திர பிரதாப் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் மகிழ்ச்சியாக சென்ற குடும்ப வாழ்க்கையில் மகன் மூலமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது 13 வயது மகன் அதிக நேரம் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவது மற்றும் தொலைக்காட்சியை பார்ப்பது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளான். இது தாய்க்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மகனின் எதிர்காலம் குறித்து ஷீலா அடிக்கடி கவலை கொண்டு கணவரிடம் புலம்பியுள்ளார். தன் மகனின் இந்த பழக்கத்தை மாற்ற அவர் எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கணவரிடம் மிக வருத்தத்துடன் மகன் தொடர்பாக பேசியுள்ளார்.
பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் ரவீந்திர பிரதாப் கண் விழித்த போது அருகில் இருந்த மனைவியை காணவில்லை. உடனே அதிர்ச்சி அடைந்து வீட்டில் தேடிய போது பூஜை அறையில் ஷீலா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷீலாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகனின் எதிர்காலம் பற்றி கவலையில்தான் ஷீலா இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் கடன் வழங்கல் வேகமாக வளர்ந்தாலும், மோசடி ஆபத்தும் அதிகரித்துள்ளது. போலி செயலிகள், குறுஞ்செய்திகள், அபத்தமான சலுகைகள் மூலம்…
நேற்று நடைபெற்ற போர்ச்சுகல்லின் FIFA உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சை சைகையை கிளப்பினார். அதாவது…
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே,…
பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள்…
வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், செல்வம், கோபத்தைக் குறிக்கும். டிசம்பரில் செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுவதால் சில…
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். கைகளை சுழற்றி, முன், பின், பக்கவாட்டு நடை போன்ற மாற்றங்களைச்…