அதுக்காக இப்படியா..? இளைஞரைக் கடத்திச் செருப்பு மாலை போட்டு… சிறுநீர் குடிக்க வைத்த 25 பேர் கும்பல்… ராஜஸ்தானை உலுக்கிய ‘பகீர்’ சம்பவம்..!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், திருமண விவகாரம் தொடர்பான முன்விரோதம் காரணமாக 21 வயது இளைஞர் ஒருவரைக் கடத்தி, செருப்பு மாலை அணிவித்து, கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மீர் மாவட்டம் கக்வானா கிராமத்தைச் சேர்ந்த ஜீது (21) என்ற இளைஞர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, 20 முதல் 25 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஒரு வாகனத்தில் ஏற்றி, பீர் கிராமத்திற்கு கடத்திச் சென்று சிறை வைத்துள்ளனர்.

சிறை வைக்கப்பட்ட ஜீதுவுக்கு அக்கும்பல் கடுமையான சித்திரவதைகளை அளித்துள்ளது. அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து, பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதோடு, வலுக்கட்டாயமாகச் சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளனர். இந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தை அக்கும்பல் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் இந்த கொடூரத்திற்குப் பின்னணியில் உள்ள திருமணப் பகை வெளிவந்துள்ளது. பீர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. அதன் பிறகு அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, அந்தப் பெண்ணை ஜீது இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமண விவகாரத்தில் ஏற்பட்ட முன்பகை காரணமாகவே இந்த கொடூரக் கடத்தலும் தாக்குதலும் அரங்கேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Soundarya

Recent Posts

மகனுக்கு 3 சக்கர வண்டி வாங்க காசில்லை.. இன்று ₹12 கோடிக்கு அதிபதி!.. கண்ணீர் விட்ட ஏழைத் தந்தையின் விபரீத அதிர்ஷ்டம்.. நெட்டிசன்களை உருகவைத்த சம்பவம்..!!

கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங்…

32 seconds ago

தவெக-வுக்கு தாவிய மதிமுக சிங்கம்… 33 வருட உழைப்பை ஒரே நாளில் தூக்கி எறிந்த நாகராஜ்… பின்னணியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து, அக்கட்சியின் முக்கிய…

2 minutes ago

ஈரான் கொடுத்த ‘செக்’… ட்ரம்ப் சொன்ன ‘Nuclear Dust’… உலகையே நிம்மதி அடைய வைத்த அந்த 3 கட்ட பிளான்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த பல மாதங்களாக உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது…

8 minutes ago

“ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்… கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல்…” பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த பெ.சண்முகம்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும்…

10 minutes ago

“விஜய் வெறும் பொம்மை முதல்வர்”…. ’லாட்டரி’ ஆதவ் தான் ஆக்டிங் முதல்வர்… அனிதா ராதாகிருஷ்ணன் உடைத்த அதிரடி ரகசியம்… பரபரப்பு…!

தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…

17 minutes ago

நண்பனின் மனைவியோடு கள்ளக்காதல்!.. வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்திய மத்திய காவல் படை காவலர்.. “என் புருஷனை மீட்டுத்தாங்க!”.. மனைவி 2 மகன்களுடன் நெஞ்சை உருக்கும் தர்ணா..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…

23 minutes ago