“நான் செய்தது தவறு” அமைச்சர் பதவியேற்ற 3 நாட்களில் எழுந்த சர்ச்சை… பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அமைச்சர் கீர்த்தனா…!!

By Soundarya on வைகாசி 13, 2026

Spread the love

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கீர்த்தனாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியது சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, இது ஏற்கத்தக்கதல்ல எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கடுமையாகச் சாடினர்.

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். தான் ஒரு மாற்றுத்திறனாளி தாய்க்குப் பிறந்த மகள் என்றும், அந்த வலியும் வேதனையும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், “அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம்” என்று அவர் பொதுமக்களுக்கும் அரசியல் விமர்சகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.