மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று, கோலாகலமாக நடந்தது. மணமகன் சுஜல் சமுத்ரே(22) தன்னுடைய புது மனைவியுடன் மேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராகவ் என்ற நபர் விறுவிறுப்பாக மேடைக்கு சென்று மணமகனை சரமாரியாக குத்தி விட்டு தன்னுடைய நண்பரோடு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றார். இந்த காட்சி அங்கு பறந்து கொண்டு இருந்த ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜே சேவைகளுக்கான கட்டணம் தருவதில் மணமகனுக்கும் ராகவ் என்ற நபருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதில் மணமகன் ராகவ தவறாக பேசி அவர் மீது செல்போனை வீசி அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தகராறில் மணமகன் நண்பர்கள் ராகவ் வீட்டை சேதப்படுத்தி தங்கள் பைக்கை தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் ராகவ் மணமகனின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது மணமகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடந்த உடனேயே அரங்கத்தில் இருந்த ட்ரோன் கேமரா ராகவ் வாகனத்தை பின்தொடர ஆரம்பித்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணித்த கேமரா அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்துள்ளது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணமாகும். பெண்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான்…
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியில் வசித்து வரும் ரவீந்திர பிரதாப் சிங் என்பவருக்கு ஷீலா சிங் என்ற மனைவியும்…
இன்றைய(14.11.2025) ராசிபலன் குறித்து பார்க்கலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஐந்தாமிட சந்திரன் இருப்பதால் நன்மை கிடைக்கும். உங்கள் தந்தை மற்றும்…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக…
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ஒரு தம்பதியினரின் சண்டை பேசுபொருளாக மாறியது. இதனால், கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தின்…