16 வயதில் குழந்தை திருமணம் செய்து கர்ப்பம்…. திருமணத்தை மறைக்க ரூ.50000 லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

தர்மபுரி பகுதியை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை தொடர்ந்து அவரை பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததையும் சிறுமி கர்ப்பமானதையும் மருத்துவர்கள் கண்டறிந்தன. உடனே இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தி பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (50) சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்யாமல் இருக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

   

பிறகு லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆறின் அறிவுரையின் பெயரில் ரசாயன பவுடர் தடவிய ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் வீரமாளிடம் சிறுமியின் தாயார் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.