காதல் கணவரால் நடந்த துயரம்… ‘மகராசி’ சீரியல் நடிகை…மருத்துவமனையில் அனுமதி…உதவி கேட்டு கதறும் வீடியோ உள்ளே…

By Begam

Published on:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மகராசி’ சீரியலில் நடிக்கும் நடிகை திவ்யா தன்னுடைய கணவரால் அடித்து துன்புறுத்தப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ‘கேளடி கண்மணி’ எனும் தொடர் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தற்போது ‘செவ்வந்தி’ சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்த சக நடிகர் அர்னாவ் வை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

நடிகை திவ்யாவின் கணவரான அர்னாவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லம்மா’ சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ சீரியலில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர். அதன் மூலம் இவர்களுக்கிடையில் காதல் ஏற்பட்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

தற்பொழுது இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த திருமணத்தை பதிவும் செய்துள்ளனர். விரைவில் தங்களுக்கு குழந்தை பிறக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது நடிகை திவ்யா தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தன்னுடைய கணவன் மறுநாள் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், எனக்கு நீதி வேண்டும் என்றும் அந்த வீடியோவில் அவர் உதவி கேட்டுள்ளார். இப்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.