Connect with us

“குழந்தை பிறந்த இரண்டே மாதத்தில் தற்கொலைக்கு முயன்று ICU-வில் இருந்தேன்.. இதனால் தான் விவாகரத்து”.. மனம் திறந்த சீரியல் நடிகை கிருத்திகா..

CINEMA

“குழந்தை பிறந்த இரண்டே மாதத்தில் தற்கொலைக்கு முயன்று ICU-வில் இருந்தேன்.. இதனால் தான் விவாகரத்து”.. மனம் திறந்த சீரியல் நடிகை கிருத்திகா..

 

டிவி சீரியல்களில் நம்பியாரை போல வில்லத்தனம் காட்டும் நடிகைகளை, பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. அதனால் அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்பு வருகிறது. மெட்டி ஒலி, பாண்டவர் பூமி சீரியல்களில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது. அந்த வகையில், பிஸியான ஒரு சீரியல் நடிகையாக வலம் வந்தவர் கிருத்திகா அண்ணாமலை. கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன் பிள்ளையுடன் வாழ்ந்து வரும் அவர், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,

சீரியலுக்கு வரும் முன்பே ஆண்டான் அடிமை என்ற படத்தில் சத்யராஜ் தங்கையாகவும், மோனல், குணால் நடித்த ஒரு படத்தில் குணாலுக்கு தங்கையாகவும் நான் நடித்திருக்கிறேன். பெண்கள் பள்ளியில் படித்த நான், பெண்கள் சூழலில் இருந்துவிட்டு, சினிமாவில் ஆண்களுக்கு மத்தியில் இருப்பது பிடிக்காமல் மீண்டும் படிக்கவே வந்துவிட்டேன்.

   

ஆனால் அதற்கு பின் டிவி சீரியல்களில் நிறைய வாய்ப்பு வந்தது. பல சீரியல்களில் நடித்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றேன். பிறகு எனக்கு பெற்றோர் ஏற்பாட்டின்படி திருமணம் நடந்தது. திருமணமான 10வது மாதத்திலேயே குழந்தை பிறந்தது. அப்போது 3 சீரியல்களில், 9வது மாதம் வரை நடித்துக்கொண்டுதான் இருந்தேன். குழந்தை பிறந்த பிறகு சீரியல்களில் நடிக்கவில்லை.

அந்த நேரத்தில் என் கணவருக்கு பிஸ்னஸில் பலத்த நஷ்டம் ஏற்பட்டு, வீட்டில் இருந்தார். வேறு வேலைக்கு போகாததால், அதனால் பல பிரச்னைகள், குறிப்பாக பொருளாதாரம் சார்ந்த கஷ்டங்கள் ஏற்பட்டது. அந்த சூழலில் மனம் வெறுத்துப் போய் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். குழந்தை பிறந்த இரண்டே மாதத்தில், தற்கொலைக்கு முயன்று ஐசியுவில் இருந்தேன். 2012ம் ஆண்டில் இது நடந்தது,

அதற்கு பிறகு, 2016ம் ஆண்டு வரை என் கணவருடன் வாழ்ந்தேன். அதன்பிறகு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டேன். அதன்பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது சில பட வாய்ப்புகள் தேடிவந்தன. ஆனால் சினிமாவில் நடிக்க விருப்பமின்றி அதை வேண்டாம் என மறுத்துவிட்டேன். கலா மாஸ்டர் கூட சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறிப்பிட்டும் நான் சீரியலில்தான் நடிக்க வந்தேன். சின்ன வயதில் இருந்தே அம்மா பெண்ணாக நான் வளர்ந்தவள்.

குடும்பத்தில் பணப்பிரச்னை வந்த போது எதற்கெடுத்தாலும் அம்மாவிடம் கேட்க தயக்கமாக இருந்தது. நான் ஒரு ஆணிடம் எதற்காக அடிமையாக வாழ வேண்டும் என்று தோன்றியது. அட்ஜஸ்ட்மென்ட் செய்து நானும் 6 ஆண்டுகள் ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், முடியாத ஒரு கட்டத்தில்தான் விலகினேன். குழந்தை பிறந்த 2வது மாதத்தில் தற்கொலைக்கு முயன்றேன் என்றால், அந்தளவுக்கு அந்த சூழ்நிலை எனக்கு மிக மோசமாக இருந்தது, என்று கூறியிருக்கிறார் நடிகை கிருத்திகா அண்ணாமலை.

author avatar
Sumathi
Continue Reading
To Top