Connect with us

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் முதன்முதலாக பார்த்திபனை சந்தித்த ஜோவிகா… இவங்களுக்குள்ள இப்படி ஒரு தொடர்பா..? வெளியான சீக்ரெட்…

CINEMA

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் முதன்முதலாக பார்த்திபனை சந்தித்த ஜோவிகா… இவங்களுக்குள்ள இப்படி ஒரு தொடர்பா..? வெளியான சீக்ரெட்…

 

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 60 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

   

பிக் பாஸில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா. சிறு பிள்ளை தானே எவ்வளவு நாள் தாக்குப் படிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், 18 வயது கூட நிறைவடையாத ஜோவிகா தனது சிறப்பான விளையாட்டை ஆரம்பத்தில் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் போகப் போக  மாயா மற்றும் பூர்ணிமா உடன் இணைந்து, இவர் செய்த செயல்கள் ரசிகர்களின் கோபத்தை அதிகரித்தது.

மேலும் பிரதீப் விஷயத்தில் இவர் நடந்து கொண்டது ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது அம்மாவுடன் பிக் பாஸ் ரிவ்யூ லைவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த லைவில் நடிகை வனிதா, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஜோவிகா சர்ப்ரைஸாக  கோவாவில் தன்னை சந்தித்ததாகவும்,

ஆனால் அங்கு அவரை சந்திப்பதற்கு முன்னதாகவே நடிகர் பார்த்திபனை சந்தித்து அவரது காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கியதாகவும் கூறினார். நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் நடிகர் பார்த்திபனிடம் அசிஸ்டன்ட் ஆக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இதனை அறிந்த ரசிகர்கள்’ என்னது ஜோவிகா நடிகர் பார்த்திபனுக்கு அசிஸ்டண்டா..?’  என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top