CBSE என்னும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த CBSE யின் முக்கிய நோக்கமானது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் இணைந்த நிறுவனங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான ஆண்டு தேர்வை நடத்துதல் பாடத்திட்டத்தை புதுப்பித்தல் வடிவமைத்தல் போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறது. இது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பொது தேர்வு வாரியங்களில் ஒன்றாகும்.
CBSE தன்னுடன் இணைந்த பள்ளிகள் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட பிற செயல்பாடுகளுக்கு இடைநிலை மற்றும் மூத்த இடைநிலை அளவில் பொது தேர்வில் நடத்துவதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அகில இந்திய போட்டி தேர்வு மூலம் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை நிரப்பிய பிறகு தேவைப்படும் ஆவணங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யலாம்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் CBSE வாரியத்தின் இணையதளமான https://cbse.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது தவிர வேறு எந்த முறையிலும் விண்ணப்பிங்களை சமர்ப்பிப்பது ஏற்கப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எந்த ஒரு CBSE அலுவலகத்திலும் பணி அமர்த்த படுவார்கள். இந்தப் பணியில் சேர விரும்புவர்களுக்கு தகுதி, வயது தளர்வு, தேர்வு கட்டணம், ஊதிய விகிதம், தேர்வு நகரங்கள், முக்கிய அறிவுரைகள், தேர்ந்தெடுக்கும் முறை போன்ற விரிவான தகவல்களை CBSE யின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த காலி பணியிடங்களையும் நிரப்புபவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணக்க கடைசி தேதி 31. 1. 2025 ஆகும்.