தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் நடவடிக்கை காரணமாக, கடந்த காலங்களைப் போலவே தற்போதும் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இதனால் அரசு தரப்பில் இருந்து விரைவில் ஒரு ‘சர்ப்ரைஸ்’ அறிவிப்பு வெளியாகக்கூடும் எனப் பேசப்பட்டாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் அரசிடமிருந்து முறைப்படி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
