Categories: CINEMA

‘ஜெயம்’ படத்தை பார்த்துவிட்டு ஏன் இவ்ளோ செலவு பண்ணிருக்கீங்கனு கேட்ட ரஜினி.. ஒரு வார்த்தையில் ரஜினியை உறையவைத்த ஜெயம் ரவியின் அப்பா ..

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து சினிமாவில் ஹீரோவாக நடிப்பது என்பது சாதாரண விஷயம். அதே நேரம் சினிமாவில் கேமராவுக்கு பின் வேலை செய்யும் கலைஞர்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. அப்படி வந்தாலும் அவர்கள் சினிமாவில் காலூன்றுவது என்பது கடினம். அப்படி சினிமா பின்புலத்தில் இருந்து வந்தாலும், தனக்கென்று தனி அடையாளங்களை பெற்றிருப்பவர்கள் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா. இவர்களின் தந்தை எடிட்டர் மோகன்.

#image_title

சினிமாவில் ஒரு எடிட்டராக தனது பயணத்தை தொடங்கிய மோகன் பிற்காலத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 63 வருட அனுபவம் உள்ளவர் மோகன். 1954-ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தவர் 50 மொழி மாற்று படங்களையும், 17 நேரடி படங்களையும் தயாரித்து இருக்கிறார். இவரது மூத்த மகன் மோகன் ராஜா, ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது இரண்டாவது மகனான ரவியும், இதேப் படத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குடும்பமாக சேர்ந்து முன்னேறுவது என்பது இவர்களை பார்த்து கற்றுக் கொள்ளலாம். தந்தை தயாரிக்க, மூத்த மகன் இயக்க, இளைய மகன் நடிக்க என தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வளர்ந்து கொள்வர். அப்படி இந்த மூவர் கூட்டணி ஒன்றினையும் போதெல்லாம், அமையும் படங்கள் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். அப்படி தான் ஜெயம் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. மோகன் ராஜா இயக்கத்தில், ரவி, சதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியானது ஜெயம் படம்.

தெலுங்கில் 2002-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தை, அதேப் பெயரில் தமிழில் ரீமெக் செய்திருந்தனர். படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜா, ஜெயம் ராஜா எனவும், ரவி ஜெயம் ரவி எனவும் பிரபலமானார்கள். தெலுங்கில் இசையமைத்திருந்த ஆர்.பி.பட்நாயக்கே தமிழிலும் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழு படத்தையும் பார்க்க, படத்தின் தயாரிப்பாளர் மோகன் கிளம்பியுள்ளார்.

#image_title

அப்போது அவருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தானும் படத்தை பார்க்க வருவதாக அடம்பிடித்துள்ளார். சரி என மோகன் கூற, தனது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என குடும்பத்துடன் ஜெயம் படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்துள்ளார் ரஜினி. இடைவேளையின் போது, மோகனை சந்தித்த ரஜினி, எதற்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டாராம். அதற்கு பதிலளித்த மோகன், தனது இரு மகன்களின் எதிர்காலமாச்சே எனக் கூறினாராம். இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் மோகன்.

#image_title

Archana
Archana

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

4 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

5 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

5 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

6 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

11 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

11 மணி நேரங்கள் ago