CINEMA
படம் ஓடாததுக்கே இவ்வளவு காஸ்ட்லியான gift-ஆ.? மருமகனுக்கு விலை உயர்ந்த பொருளை பரிசளித்த ஜெயம் ரவி மாமியார்..
கடந்த மாதம் வெளியான சைரன் படத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் பல பெற்றிருந்தாலும், ஜெயம் ரவி அவர்கள் புதுமுக இயக்குனர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளித்து வருகிறார். 2000 காலகட்டத்தில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த ஜெயம் ரவி, தற்போது சில ஆண்டுகளாக தோல்வி படங்களாக கொடுத்து வருகிறார்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” படத்தில் ஜெயம் ரவி அவர்கள் ராஜராஜ சோழனாக நடித்து மாபெரும் வெற்றியைக் கண்டிருந்தார். அதன் பின்னதாக இவருக்கு பட வாய்ப்புகள் பல வந்து குவிந்தன, பொன்னின் செல்வன் படத்திற்கு பின் மீண்டும் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார்.
ஆனால் அதன் பின் வந்த எந்த படமும் இவருக்கு சரியாக போகவில்லை, மீண்டும் தோல்வியை தான் சந்தித்தார், அதைத் தொடர்ந்து கடந்த மாதம் புதுமுக இயக்குனரான ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் இவர்கள் நடிப்பில் வெளிவந்த படம் தான் “சைரன்”, இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை கொண்டு ஓரளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்றது, இப்படமும் ஜெயம் ரவி அவர்களுக்கு பெரிதளவு போகாமல் தோல்வியை தழுவியது என்றே கூறலாம். ஆனாலும் ஜெயம் ரவி அவர்கள் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதை தவிர்க்காமல் செய்து வருகிறார்.
தற்போது சைரன் பட தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அதிபரும், ஜெயம் ரவி அவர்களின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் அவர்கள் தொடர்ந்து ஜெயம் ரவி படங்களை தயாரித்து வருகிறார், ஆனால் எல்லா படமும் வரிசையாக தோல்வியை தான் தழுவி வருகிறது, இருப்பினும் தனது மருமகனுக்கு மிக விலை உயர்ந்த வாட்ச்சை பரிசளித்துள்ளார், அந்த வாட்ச் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள், பல தோல்விகளை தழுவியும் தன் மருமகனுக்கு இவ்வளவு விலை உயர்ந்த பரிசு கொடுத்திருப்பது மிகப்பெரிய விஷயம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.