![vijay 18 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/vijay-18.jpg)
CINEMA
‘கில்லி’ அலப்பறையே இன்னும் ஓயல அதுக்குள்ளே வா… ரீ ரிலீசாக போகும் விஜய்யின் கமர்ஷியல் படம்..
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பகவதி திரைப்படத்தை ரசிகர்கள் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கின்றார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த் , அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா உள்ள பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்-ஆக உள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. வாரிசு, லியோ போன்ற படங்களின் பாடல்களைப் போன்ற இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. இருப்பினும் அடுத்த பாடல் ஹிட்டாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படம் முழுமையாக முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஹெச் வினோத்திடம் நடிகர் விஜய் கதை கேட்டு வருகின்றார். அது பிடித்துப் போனால் அடுத்த படம் ஹெச் வினோத் தான் இயக்குவார் என்று கூறப்படுகின்றது. சமீபத்தில் நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் ரீரிலிஸ் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.
பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு என்ஜாய் பண்ணினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் வருகிற 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் என்பதால் விஜய் முதன்முதலாக ஆக்சன் ஹீரோவாக நடித்த பகவதி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் எனக் கூறப்படுகின்றது.
நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு பில்லா திரைப்படம் வெளியானதை தொடர்ந்து விஜயின் பிறந்த நாளுக்கு பகவதி திரைப்படத்தை வெளியிடப் போகிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.