சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3ல் கலந்து கொண்ட யாழினியா இது?… ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!… 

By Begam

Published on:

சூப்பர் சிங்கரில் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாழினி தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி பல பாடகர்களை திரையுலகிற்கு தந்துள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என பலசீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எளிதாக வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து பிரபலமாகி விடுகின்றனர்.

   

இந்நிகழ்ச்சியை மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது .பல சீசன்களை கடந்து தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. தற்பொழுது சூப்பர் சிங்கர் சீனியர் 9வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இதில் பென்னி தயால், ஸ்வேதா, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இந்த புதிய சீசனில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளரான யாழினி தற்பொழுது வளர்ந்து சூப்பர் சிங்கர் சீசன் 9 சீனியர் சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

தற்பொழுது இவரை பார்த்த ரசிகர்கள் ‘ஜூனியர் சீசனில் வந்த யாழினியா இவர்? ஆள் அடையாளம் தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் வீடியோ….