இசையமைப்பாளர் அனிருத் தனது சொந்த அக்காவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் திடீரென்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழில் தனுஷ் நடித்த ‘3’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடல் உலகெங்கும் பரவியது. இதன் மூலம் அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இதைத் தொடர்ந்து இவர் இசையமைத்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, இரண்டாம் உலகம், மாநகராட்சி, கத்தி, மாரி, நானும் ரவுடிதான், தங்க மகன், கோலமாவு கோகிலா, பேட்ட, தாராள பிரபு, மாஸ்டர்,டாக்டர், காத்து வாக்குல ரெண்டு காதல் என பல எண்ணற்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் தற்பொழுது இந்தியன் 2, ஜெயிலர், தளபதி 67, ஏகே 62 போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறா.ர் இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது அக்கா வைஷ்ணவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆம். அனிருத்துக்கு வைஷ்ணவி எனும் ஒரு அக்கா உள்ளார். இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் இவருக்கு சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது அனிருத் தனது அக்காவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ இந்த புகைப்படங்கள்….