சினிமாவுக்காக இப்படியா?… மறைந்த நடிகர் வினுச்சக்கரவர்த்தி செய்த செயல்!… வைரலாகும் அதிர்ச்சி தகவல் இதோ!…

By Begam

Published on:

பழம்பெரும் நடிகர் வினு சக்கரவர்த்தி சினிமாவிற்காக செய்த ஒரு செயல் காலம் கடந்து தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் வினுசக்கரவர்த்தி. இவர் 1977 ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழ் கன்னட சினிமாக்களில் உதவி இயக்குனராக, கதை எழுதுபவராக பணிபுரிய தொடங்கினார். இதன் போது ஏற்பட்ட பழக்கம் காரணமாக வினுசக்கரவர்த்தியை தயாரிப்பாளர் திருப்பூர் மணி நடிகனாக அறிமுகம் செய்தார்.

   

இதன் பின் பல்வேறு படங்களில் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார் நடிகர் வினுசக்கரவர்த்தி. இவரே ‘வண்டிச்சக்கரம்’ என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் சில்க் சுமிதாவை அறிமுகம் செய்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. நடிகர் வினு சக்கரவர்த்தி 1945ல் பிறந்த இவர் 2017ல்  உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி. இவர் மறைந்து பல ஆண்டுகளைக் கடந்த நிலையில் சினிமாவுக்காக அவர் செய்த நிகழ்ச்சியான செயல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் வினு சக்கரவர்த்தி மதுரை மண்ணில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சென்னையில் முடித்து காவல் துறையில் சேர்ந்துள்ளார்.

பின்னர் தெற்கு ரயில்வேயில் உயரதிகாரியாக பொறுப்பேற்று சில காலங்கள் பணிபுரிந்துள்ளார். இதன் பின்னர் சினிமாவில் மீதுள்ள ஆசையின் காரணமாக அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். சினிமா  மீது கொண்ட ஆசை காரணமாக அரசு பணியில் இருந்த இவர் அரசாங்க வேலையை வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு நடிக்க வந்துள்ளார் நடிகர் வினு சக்கரவர்த்தி. இத்தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.