நடிகை சமந்தா இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?…….மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமந்தா….கவலையில் ரசிகர்கள் ….

By Begam

Published on:

தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

2010ல் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் சமந்தா. தமிழ், தெலுங்கு பாலிவுட் என இப்போது பல மொழிகளை கடந்து பான் இந்தியா சூப்பர் ஸ்டார் ஆக  ரவுண்டு அடித்து வருகின்றார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

   

இப்படத்தில் கதீஜாவாக நடித்து கலக்கியுள்ளார் சமந்தா. நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தனது வாழ்க்கையில் காதல், திருமணம், பிரிவு என பல சோதனைகளையும் கடந்து தற்பொழுது இந்தியாவில் முக்கியமான நடிகையாக உள்ளார் சமந்தா. சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனன் உடன் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு அவர் ஆடிய ஐட்டம் டான்ஸ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வரும் சமந்தா தற்பொழுது அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சமந்தாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்சனை ஏற்பட்டது. அதிக வெளிச்சத்தால் அலர்ஜி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் ,வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

சமீப காலமாக அவருடைய புகைப்படங்கள் எதுவும் வெளியாகததால் ஏகப்பட்ட வதந்திகள் பரவத் தொடங்கியது. தற்பொழுது நடிகை சமந்தா தோல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேல்  சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.