FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 24, 2026

Spread the love

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான அடுத்தகட்ட விலை உயர்வு மிக விரைவிலேயே அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ₹5 வரை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்தடுத்து வரவிருக்கும் புதிய விலை உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.