பெண்களே.. இலவச ஓட்டுனர் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு.. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்..!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

மகளிருக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் தமிழக அரசு ஒரு சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளது. பெண்கள் வணிக வாகன ஓட்டுனராக உருவாகும் வகையில் இலவச பயிற்சி திட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பயிற்சி சாலை போக்குவரத்து நிறுவனம் மூலமாக தொழில் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுகின்றது. இந்த பயிற்சி மூலமாக பெண்கள் psv வகை வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் மற்றும் தொழில் முனைவோர் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியும். பயிற்சி முழுவதும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

பயிற்சி முடிந்ததும் வேலை வாய்ப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும். கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, பாளையங்கோட்டை, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. மொத்தம் 65 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். 18 முதல் 35 வயது உடையவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இதில் கலந்து கொள்ளலாம். கல்வி சான்றிதழ்கள், பிறப்புச் சான்றித, ஆதார் மற்றும் இருப்பிட சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவை தேவைப்படும். விருப்பமுள்ளவர்கள் என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 20 விண்ணப்பிக்க கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.