நடிகை யாஷிகா ஆனந்த் தனது பள்ளி பருவ புகைப்படத்தினை இணையத்தில் தற்பொழுது பகிர்ந்துள்ளார்.
தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தமிழ் திரையுலகில் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் இருந்த இவர் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் இவர் நடிப்பில் வெளியான அடல்ட் படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் மூலம் கவர்ச்சி நடிகையாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். இதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் சரியாக அவருக்கு அமையவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை யாஷிகா. அவ்வப்போது தனது கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது அவர் தனது பள்ளி பருவ புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…