பிரபல காமெடி நடிகர் சந்திரபாபுவின் அழகான குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?… அவரது வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?…

By Begam

Published on:

மறைந்த பிரபல காமெடி நடிகர் சந்திரபாபுவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகவும், சிறந்த பாடகராகவும் விளங்கியவர் நடிகர் சந்திரபாபு. நகைச்சுவை மன்னன் என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள் தமிழ் திரைப்பட துறையில் ஒரு புகழ் பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம் ,சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அற்புத கலைஞனாகவும் விளங்கியவர்.

   

குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே, உனக்காக எல்லாம் உனக்காக, பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே, நான் ஒரு முட்டாளுங்க, ஒண்ணுமே புரியல உலகத்துல போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளை கடந்தும் தமிழிசை நெஞ்சங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் குறைந்த காலகட்டத்தில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி ஒரு பாடகர் ஆகவும் புகழின் உச்சியை அடைந்தவர். 1947ல் ‘அமராவதி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் முதன் முதலாக கால் பதித்தார். 1950 களில் பெரும் நட்சத்திரங்களாக இருந்த சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ,ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவில் முன்னணி நகைச்சுவை நடிகர் ஆனார்.

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோஷப்படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. இவர் 1958ல் திரைப்பட தயாரிப்பாளர் சுவாமிகண்ணு வின்சென்ட்டின், பேத்தியும், ஆங்கிலோ இந்தியருமான ஷீலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் முதல் இரவில் தனது மனைவி ஷீலா வேறொருவரை காதலிப்பதாக கூறியதும், அவரது ஆசையை நிறைவேற்ற அவரது காதலனுடன் சேர்த்து வைத்தார். தொடர்ந்து அவர் எந்த திருமணம் செய்யாமல் தனியாகவே வாழ்ந்து 1974ல்  தனது 47 வது வயதில் இறந்தார்.

இதோ அவரின் திருமண புகைப்படம்….