செம குஷி பொண்ணு..! ஆவா எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்… மகளுக்காக ஒன்று சேர்ந்த ஜி.வி – சைந்தவி… இணையத்தில் வைரலாகும் ஜி.வி. பிரகாஷின் பேட்டி…!!

By Gayathri on புரட்டாதி 1, 2026

Spread the love

‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், தனது சிறப்பான திறமையால் ரஜினி, அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனி முத்திரை பதித்தார். சிறந்த இசைக்காக மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ள இவர், நடிப்பின் மீதான ஆர்வத்தால் பல முக்கிய இயக்குநர்களின் படங்களில் நாயகனாகவும் வலம் வருகிறார். தற்போது அவரது நடிப்பில் ‘இம்மார்ட்டல்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இவரது தனிப்பட்ட வாழ்க்கையில், பள்ளிக் காலத்திலிருந்தே தன்னிடம் ஜூனியராகப் படித்த பாடகி சைந்தவியுடன் காதல் மலர்ந்தது. பல ஆண்டுகள் தொடர்ந்த இவர்களது ஆழமான காதல், இரு குடும்பத்தாரின் முழு சம்மதத்துடன் திருமணத்தில் இனிதே முடிந்தது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்தத் தம்பதியினருக்கு அன்வி என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

   

பல வருடங்கள் இணைபிரியாமல் இருந்த இவர்கள், சமீபத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவித்தனர். இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவியும் தனது மகள் அன்வியும் தனது வாழ்வில் மிகவும் சிறப்பானவர்கள் என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் பிரிந்தாலும் தங்களுக்கிடையேயான நட்பு எப்போதும் தொடரும் என்றும், தங்கள் மகளை இருவரும் இணைந்து அன்பாக வளர்த்து வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.