டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 15 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்ற இந்த முதன்மைத் தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்வில் பங்கேற்று தங்களின் முடிவுகளுக்காகக் காத்திருந்த தேர்வர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிந்து கொள்ள TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
