டெல்லியில் சாஹர்பூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அவருடைய மனைவி உயிரிழந்துவிட்டார். இதனால் 4 பிள்ளைகளையும் அவர் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த தொழிலாளியின் 10 வயது மகன் நேற்று அந்தப் பகுதியில் மழை பெய்ததால் அதில் விளையாட ஆசை பட்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய தந்தையிடமும் கூறியுள்ளார். ஆனால் மழையில் நனைய கூடாது என்று அவர் கண்டித்துள்ளார்.
ஆனால் தந்தையின் பேச்சைக் கேட்காமல் மழையில் விளையாட அந்த சிறுவன் அடம்பிடித்து உள்ளான். இதனால் கோபம் அடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகன் என்றும் பாராமல் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விரைந்து வந்து மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
