தமிழகத்தில் தொலைதூரப் பயணங்களுக்கு அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரியை மற்றும் பெங்களூர் என பல்வேறு நகரங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பேருந்து பயணத்தின் போது குடிநீர் தேவைப்பட்டால் பயணிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய திட்டத்தை கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கான இணைய வழி டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் இ டெண்டர் மூலமாக விண்ணப்பங்களை அரசு விரைவு போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. டென்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு இந்த திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
