இன்று நடந்ததை அன்றே கணித்த உலகநாயகன்… 4 ஆஸ்கார் விருதுகளை வென்ற திரைப்படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் நடிப்பில் உருவான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘விக்ரம்’. இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

   

தற்பொழுது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் கமலஹாசன் நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று 4 ஆஸ்க்கார் விருதுகள் வென்ற திரைப்படம் குறித்து கூறிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

அதாவது இன்று 95வது ஆஸ்க்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இந்த விழாவில்இந்திய சினிமாவிற்கு இரண்டு ஆஸ்கர்கள் கிடைத்துள்ளது. இதில் 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற திரைப்படம் தான் ALL QUIET ON THE WESTERN FRONT. இந்த திரைப்படம் Best Cinematography, Best International Film, Best Production Design, Best Original Score என 4 பிரிவுகளிலும் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில், 4 ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்துள்ள ALL QUIET ON THE WESTERN FRONT படம் குறித்து விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் உலக நாயகன் கமல் ஹாசன் பேசியுள்ளார். இதில் பேசிய அவர் ‘சமீபத்தில் ALL QUIET ON THE WESTERN FRONT என்ற படத்தை பார்த்து வியந்தேன். 18 வயதில் இருப்பவர்கள் அருமையாக அப்படத்தில் நடித்துள்ளார்கள். இதையெல்லாம் ஏன் நான் இன்னும் செய்யவில்லை என்று கேள்வி எழுந்தது ‘ என கூறியுள்ளார்.