ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய நதியா…. என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?

By Begam

Published on:

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நேற்று அவருடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலகினர்  வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவர் ஜெயம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகம் ஆனதால் ,அந்த பட டைட்டில் அவருடன் இணைந்து ‘ஜெயம் ரவி’ என்று ஆனது.

   

இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் ,தீபாவளி, பேராண்மை ,தில்லாலங்கடி, ஆதி பகவன், நிமிர்ந்து நில், சகலகலா வல்லவன் போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதில் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த நதியா ‘ஹாப்பி பர்த்டே குமரன்’ என்று தனது வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவு ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது .பல ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் இணைந்து நடித்த ஜெயம் ரவியையும் படத்தின் டைட்டிலையும் ஞாபகம் வைத்து நதியா இவ்வாறு அவரை வாழ்த்தி இருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.