கொம்பன் படத்துல வர்ற அந்த சீன் என் வாழ்க்கையில் நடந்தது.. மனம் திறந்து பேசிய இயக்குனர் முத்தையா..!!

By Priya Ram on ஜூலை 28, 2024

Spread the love

கிராமத்து பின்னணியில் படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் முத்தையா. இவர் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் வேலை பார்த்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகுமார் நடித்த குட்டிப்புலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து மருது, கொம்பன் கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கி திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார்.

   

கிராமத்து பாங்கான கதைகளை ஆக்ஷன் காட்சிகளுடன் இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கொம்பன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். அவருக்கு அப்பாவாக ராஜ்கிரண் நடித்துள்ளார். சமீபத்தில் முத்தையா அளித்த பேட்டியில் கூறியதாவது, கொம்பன் படத்தில் கார்த்திக்கும் ராஜ்கிரனுக்கும் இடையே சண்டை வரும். அப்போது கார்த்தி கோபத்தில் ராஜ்கிரணை அடித்து மண்டையை உடைத்துவிடுவார்.

   

 

இதனை பார்த்த லட்சுமிமேனனும் தனது அப்பாவை அழைத்துக் கொண்டு சென்று விடுவார். அந்த சீனை என் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை வைத்து தான் எடுத்தேன். எங்க அப்பா குடிச்சிட்டு வந்து எங்க அம்மாவை அடிப்பாரு. வீட்டில் இருக்கிற எல்லா பொருளையும் அடிச்சு ஒடச்சிடுவாரு. உடனே எங்க தாத்தா எப்படி என் மகளா அடிக்கலாம் என்று தட்டி கேட்பார். உடனே எங்க அப்பாவுக்கும் தாத்தாவுக்கு இடையே சண்டை வந்துடும். ரெண்டு பேரும் அப்படிதான் அடிச்சு புரண்டு சண்டை போடுவாங்க. அங்க இருக்க எல்லா பொருளும் ஒடஞ்சிடும்.

komban movie scenes | Karthik | Lakshmi menon | Raj kiran - YouTube

போலீஸ்காரங்க வந்து பஞ்சாயத்து பண்ற நிலைமைக்கு ஆயிரும். அப்போது கேஸ் குடுக்காம இருக்க ஊர்ல இருக்க பெரியவங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு சொன்னாங்க. எங்க அம்மா ரொம்ப வைராக்கியமானவங்க. கேஸ் எங்க அப்பா மேல தான் போட்டு இருந்தாங்க. எங்க அம்மா எங்க தாத்தா கிட்ட அப்படி மன்னிப்பு கேட்டு கேஸ் இல்லாம பண்ண வேண்டாம். பேசாம அவர் உள்ளே இருக்கட்டும்னு சொல்லிட்டு எங்க தாத்தாவை கூட்டிட்டு கிளம்பிட்டாங்க. அந்த மாதிரி நிஜத்தில் நடக்க எல்லாத்தையும் கதைல கொண்டு வரது கஷ்டம். படத்துக்கு ஏற்ற மாதிரி அந்த காட்சியை கொண்டு வந்தோம் என மனம் திறந்து பேசி உள்ளார்.

#image_title