சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் அதிகாரிகளுக்கு கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு படைகளை தவிர்த்து எந்த விதமான தனிப்படைகளும் செயல்படக்கூடாது. உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படியே முக்கியமான வழக்குகளுக்கு சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
