“யார் சாமி நீ… 90 வயது மாமியாரை கூடைக்குள் வைத்து தூக்கிச் சென்ற மருமகள்… பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் உண்மை…!!!”

By Swetha on ஆனி 29, 2026

Spread the love

ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகியான காஜல் சௌத்ரி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கூடையில் தனது 90 வயது மாமியாரைத் தலையில் சுமந்துகொண்டு 260 கி.மீ. தூரம் கொண்ட ’84-கோஸ் பிரிஜ் பரிக்ரமா’ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். புனிதமான பிரஜ் பகுதியை மத ரீதியாக வலம் வர வேண்டும் என்ற தனது மாமியாரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரைத் தானே சுமந்து செல்ல இவர் முடிவு செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வைரலாகி வருகின்றது.

இந்த அசாத்தியமான பயணம் குறித்துப் பேசிய காஜல் சௌத்ரி, “இது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த முடிவு. என் மாமியார் இதைச் செய்யும்படி என்னிடம் ஒருபோதும் கேட்கவில்லை; எனது மனநிறைவுக்காகவும், அவர் மீதான அன்பிற்காகவும் மட்டுமே நான் இதைச் செய்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நவீன காலத்தில் உறவுகளுக்குள் விரிசல்கள் அதிகரித்து வரும் வேளையில், மாமியாரைத் தாயாகக் கருதி, அவரது ஆன்மீக விருப்பத்திற்காக ஒரு மருமகள் இவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்வது பலரையும் நெகிழச் செய்துள்ளது.

   

சுமார் 260 கி.மீ. தூரம் கொண்ட இந்த ’84 கோஸ் பிரிஜ் பரிக்ரமா’ யாத்திரையானது உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பரவியுள்ளது. கிருஷ்ணரின் புராணக்கதைகளுடன் தொடர்புடைய முக்கிய இடங்கள், புனித குளங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாகச் செல்லும் இந்த கடினமான ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்ய பக்தர்கள் பொதுவாகச் சுமார் 40 நாட்கள் வரை எடுத்துக்கொள்வார்கள். அத்தகைய நீண்டதொரு பாதையை, முதியவரைத் தலையில் சுமந்தபடி கடக்கும் காஜல் சௌத்ரியின் பக்திக்கும் மனஉறுதிக்கும் இணையவாசிகள் தங்களது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்து வருகின்றனர்.