சென்னை அணி வீரர்கள் வெற்றி கோப்பையுடன்…. தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள்…

By Archana

Published on:

16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது.இதில் பத்து அணிகள் பங்கேற்ற நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடந்தது.

   

அதன் முடிவில் முதல் நான்கு இடங்கள் பிடித்த அணிகளான குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் செயின்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிளே ஆப் சுற்றும் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி கடந்த 29 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையும் கலந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தையும் தக்க வைக்கும் முனைப்பில் களத்தில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தன.

இந்த போட்டியை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் போட்டிநேற்று முன்தினம் நடைபெற்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது.

இதன் மூலமாக ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்று உள்ளது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய நிலையில் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் வெற்றி கோப்பையுடன் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Archana