பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர், தரமற்ற ஏற்பாடுகள் மற்றும் ஊழல் புகார்களால் சர்வதேச அளவில் கடும் கேலிக்குள்ளாகி வருகிறது. மைதானத்தைப் பராமரிக்க ஒதுக்கப்பட்ட நிதியை நிர்வாகத்தினர் முறைகேடு செய்வதால், ஆடுகளத்தை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் உறைகள் (Covers) மிகவும் மலிவான தரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பலத்த காற்று வீசியபோது, இந்த உறைகள் காற்றில் பறந்தன. அவற்றைப் பிடித்து ஆடுகளத்தை மூட முயன்ற மைதானப் பணியாளர்கள், உறைகளின் லேசான தன்மையால் நிலைதடுமாறி கீழே விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகக் குறைபாடுகள் ஒருபுறமிருக்க, லாகூர் கடாஃபி மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் சல்மி மற்றும் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான போட்டி, மழையினால் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானில் வெறும் இரண்டு மைதானங்களில் மட்டுமே ஒட்டுமொத்தத் தொடரும் நடத்தப்படும் நிலையில், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் 13 வெவ்வேறு மைதானங்களில் பிரம்மாண்டமாக நடத்தப்படுவதை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், வீரர்களின் ஜெர்சியிலிருந்து சாயம் கசிந்து வெள்ளை நிறப் பந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறிய கூத்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அவல நிலையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
இந்தச் சம்பவங்களை அடுத்து, இணையவாசிகள் PSL என்ற பெயரைக் கொண்டு பல்வேறு கிண்டலான விரிவாக்கங்களை உருவாக்கி வருகின்றனர். சிலர் இதை ‘தயவுசெய்து சிரிப்பதை நிறுத்துங்கள்’ (Please Stop Laughing) என்றும், வேறு சிலர் ‘பைஜாமா சல்வார் லீக்’ (Pajama Salwar League) என்றும் கேலி செய்து வருகின்றனர். உலகின் சிறந்த லீக் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பாகிஸ்தானுக்கு, இந்தத் தரமற்ற உபகரணங்களும் குளறுபடிகளும் சர்வதேச அரங்கில் ஒரு “சர்வதேச அவமானமாகவே” பார்க்கப்படுகிறது. போதிய நிதி இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாததே இத்தகைய கேலிகளுக்குக் காரணம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Wait, Whats Happening On PSL😭😂pic.twitter.com/K2YMH1ENYO
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 31, 2026
