எல்லாம் ரெடியா இருக்கு….! “உதயநிதி கைதால் கொதிக்கும் தமிழகம்…! மாநிலம் முழுவதும் போலீஸ் படையை இறக்கி முதல்வர் விஜய் ஆக்ஷன்…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

தஞ்சாவூர் உரையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நீலாங்கரையில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, முதலமைச்சர் விஜய் உயர்நிலைக் காவல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு வராமலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தாமலும் தடுக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அவர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாகச் சென்னை அண்ணா அறிவாலயம், தலைமைச் செயலகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் 15,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தீவிர வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதுடன், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் ஆயுதம் ஏந்திய அதிரடிப் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும், சாலை மறியல் மற்றும் உருவப்பொம்மை எரிப்பில் ஈடுபட முயன்ற பல திமுக நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.