பாஜகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் சிலர் விலகி ‘WE THE LEADERS’ அமைப்பில் இணைந்ததைத் தொடர்ந்து, வெற்றிடமாக உள்ள அந்தப் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியை கட்சி தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் விலகலைத் தொடர்ந்து, கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய முகங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், கட்சிப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்காக காலியாக உள்ள அனைத்துப் பொறுப்புகளையும் விரைவாக நிரப்புமாறு அந்தந்த மாவட்ட பாஜக தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
