Connect with us

பிக் பாஸ் போட்டியாளரை கைது செய்து ஜெயிலுக்கு அழைத்து செல்லும் போலீசார்.. வைரலாகும் வீடியோ..

TRENDING

பிக் பாஸ் போட்டியாளரை கைது செய்து ஜெயிலுக்கு அழைத்து செல்லும் போலீசார்.. வைரலாகும் வீடியோ..

 

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது எப்படி பிக் பாஸ் சீசன் 7 தமிழில் நடைபெற்று வருகிறதோ,  அதேபோல தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க , தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தான் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சி நிறைவடைந்தது.

#image_title

   

இதில் இறுதிப் போட்டியாளர்களாக பல்லவி பிரசாந்த் மற்றும் நடிகர் அமீர் சவுத்ரி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பல்லவி பிரசாத் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லவி பிரசாத் சோசியல் மீடியாவில் வீடியோக்கள் வெளியிடுவதின் மூலம் பிரபலமானவர். தெலுங்கானா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த விவசாயியான இவர் விவசாயம் தொடர்பான வீடீயோக்களை அதிகம் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

#image_title

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது கடின உழைப்பின் மூலம், தற்பொழுது பிக் பாஸ் டைட்டிலையும் வென்றுள்ளார். அவருக்கு ரூ. 35 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டிருந்தது. நடிகர் அமர்தீப் சவுத்ரி ரன்னராக அறிவிக்கப்பட்டிருந்தார் . ஒரு சிலர் பல்லவி பிரசாத்திற்கு டைட்டில் கொடுத்ததற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஆனால் பலரும் இதனை எதிர்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் பைனல் நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியே வந்த அமர்தீப் சௌத்திரியின் காரின் மீது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் பல்லவி பிரசாத் மற்றும் அவரது ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அழைத்து செல்லப்படும் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading
To Top