‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் 1000 எபிசோடுகள் நிறைவடைந்தது தொடர்ந்து பாரதி கண்ணம்மா குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பி யில் முன்னணியில் இருந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடிகர் அருண் பாரதியாகவும் நடிகை ரோஷினி கண்ணம்மாவாகவும், வில்லி வெண்பாவாக நடிகை பாரினாவும் நடித்து கலக்கி இருந்தனர்.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் மக்கள் மிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். டிஆர்பி ரேட்டிங் முன்னிலையில் இருந்தது.ஆனால் தொடர்ந்து கதையை சீரியல் குழு இழுவையாக இழுக்க ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்தனர். சமூக வலைத்தளங்களிலும் பாரதி கண்ணம்மாவிற்கு எதிராக குரல்கள் ஒழிக்க தொடங்கியது. தயவு செய்து சீரியலை முடிந்து விடுங்கள் என்று ரசிகர்கள் கெஞ்சி வந்தனர்.
ஆனால் இயக்குனர் சீரியலை முடிப்பதாக தெரியவில்லை. மீண்டும் தொடரும் என்பது போல கதையை வேறு ஒரு கதைக்களத்திற்கு மாற்றி இயக்குனர் சீரியலை எடுத்துக் கொண்டுள்ளார். பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது 1000வது எபிசோடை எட்டியுள்ளது. இதனை தற்பொழுது சீரியல் குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ…..
View this post on Instagram